Saturday, May 19, 2012

சென்னை (வாலிப வயோதிக )+ யூத் +பரவச பதிவர் சந்திப்பு. காமெடி கலாட்டா!!!!!


சற்று என் மேல் கோபம் வருகிறது .

இன்று சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை.
 
(சத்தியமாக  நானும் யூத் தானுங்கோ!!!!!)
 
ஒரு நல்ல வாய்பை மிஸ் பண்ணுகிறேன்  . நிகழ்ச்சி  கலக்க போவது  திண்ணம்.


பதிவர்கள்  சந்திப்புக்கு இந்த யானைக்குட்டி யின் இனிய வாழ்த்துக்கள் 

இதோ நீங்கள் யூத் பதிவர் என்றால்  கலந்து கொள்ள ஆறு  கட்டளை.
 
இன்றைக்கு முழுவதும் (சத்தியமாக  நானும் யூத் தானுங்கோ)
என்ற மந்திரத்தை சொல்லியபடி இருக்க வேண்டும்.

முடிந்தால் டி ஷர்ட் மற்றும்  கேப் (தொப்பி) போன்றவற்றை மறக்க வேண்டாம். (வரலாறு முக்கியம் ஆமாம்)

கண்டிப்பாக மொபைல் காமர அவசியம்.முடிந்தால் (வீடியோ காமர
என்றாலும் பரவாயில்லை).அப்பதான் பதிவுக்கு போட்டோ  தேத்த
முடியும் .

கண்ணில்  கண்டவர் பதிவர் என்றால் விட்டு விடாதீர்.
பாய்ந்து போய் ஒரு போட்டோ எடுத்து விடுங்கள்.(மவனே மாட்னிய!!!)


பதிவர்கள் எல்லாம்  நேரில் பார்த்தல் ரொம்பஅழகாக இருப்பார்கள் என்ற கோட்பாட்டை தயவு செய்து விட்டுவிடுங்கள் (நான் என்னை சொன்னேன்.)


பதிவர் என்றாலே பாட்ஷா மாதிரி இன்னோரு பேரு இருக்கும்...அடி வாங்காம தப்பிக்க வீட்ல (எலி) வெளில (புலி) அம்புட்டுத்தான்.
அந்த புனை பேரை  (சத்தமில்லாமல்) கேட்டு அவர் மொபைல் நம்பரை பதிவு செய்யுங்கள்.
யாராவது பதுங்கி பதுங்கி
பேக்கு மாதிரி நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்தால்
விட்டு விடாதிர். அவர்  தான் "சித்தர்" பதிவர் ஆக இருக்கலாம் .
முகத்தை காட்டாத "ஞானி" பதிவர் ஆக இருக்கலாம் .

சில தருணங்கள் ...சில வாய்ப்புகள் மறுபடியும் அப்படியே வாய்ப்பதில்லை.....எனவே சும்மா  கலக்குங்கள்.....

அன்புடனும் பாசமுடனும்
யானைக்குட்டி



Post Comment

Wednesday, May 16, 2012

என் கண்ணீர் அஞ்சலிகள்







 












என்ன அழகு , 

என்ன பணக்காரதனம் , 

நல்ல சாப்பாடு ,

கவலை இல்லா வாழ்வு 

பொறந்தா இப்படி

பொறக்கணும்..........

 

இப்படி தான் நானும் நினைத்தேன் நேற்றுவரை....

ஆனால் இன்று .......என்னமோ நெஞ்சை
கவ்வுகிறது. ........

 

என் சக உயிருக்காக இன்று என் கண்கள் கலங்கியது....  என் கண்ணீர் அஞ்சலிகள் 



நேபாள நாட்டைச் சேர்ந்த விமானமான அக்ரி சுற்றுலா விமானம் 16 இந்தியர்கள் உள்பட 21 பேருடன்  தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தலமும் மலையேற்றத்துக்குப் புகழ்பெற்ற இடமுமான ஜோம்சோமுக்கு சென்றது. விமானம் ஜோம்சோம் விமான நிலையத்தில் இன்று காலை 9.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 21 பேரில் 13 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். அதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.




பலியானவர்களில்  குழந்தை  தருணி சச்தேவும் ஒருவர். 



Post Comment

Monday, February 6, 2012

என் பொண்டாட்டி! என்னை அடிச்சுட்டா !


என்னங்க !

ம்..! ம்..!

அட  ! என்னங்க !


சொல்லு !

ஏன் எவ்வளுவு  கடுப்பு !

அட அதான் சொல்லு  என்றனே..........!

சொல்லிட்டாலும் ...க்க்கும்!!!!!!!!!

அப்ப !   சொல்லதே !


ஹலோ !நாங்க வேற எங்க சொல்ல முடியும்

எதுனாலும் உங்ககிட்டதான் சொல்லணும் .

சரி சரி ..........சொல்லு !

இந்த T .V   பார்க்கிறதை முதல நிப்பாட்டி

நாங்க சொல்லறதை கேளுங்க !!!!

இங்க பாரு! அது அது பாட்டுக்கு ஓடட்டும் .
நீ சொல்ல வந்ததை ......சொல்லு !.

ஆமா !ஆமா    எங்க மேல உங்களுக்கு எப்பதான் !
அக்கறை இருந்துசிச்சு...இப்ப இருக்க !!!

ஏன் தேவை எல்லாம பேசுற!.
சொல்ல வந்ததை ......சொல்லு !.

ஆமா ! நாங்க எது பேசுனாலும்  புடிக்கதே! 

சும்மா  நை ! நைன்னு  என்னை கொல்லாம !
சொல்ல வந்ததை ......சொல்லு !.

உங்களக்கு ஏன் எவ்வளவு எரிச்சல் !

சரி ...சரி !!! சொல்லி தொலை !

என்னது !தொலையவா !!!

நாங்க தொலைறோம் சாமி !நீங்க நல்ல இருங்க சாமி !

அட  ஐயோ ! இங்க பாரு  நீ  சொல் வந்ததை சொல்லு ...

போதும்பா! இனி நாங்க  ஒன்னும் சொல்லல !

நீங்க சொன்னதே ! போதும் .

நல்லா கட்டி வச்சாங்க  சாமி ....!!!

அட நன் என்னத்த சொல்லிடேன் ஏன் கண்ணை  கசுக்கிறே !!

அட நான் சொல்றது ! கேளும்மா !

சொல்லுங்க !

ஏன் எவ்வளுவு  கடுப்பு ! 

மறுபடியுமா ...மா,.........மா.....!!!!!!!!!!


எண்ணம் @ எழுத்து @இயக்கம் - யானைக்குட்டி  ஞானேந்திரன் 
ஓளிபதிவு- கூகுள்



Post Comment

Monday, January 30, 2012

வாங்க படிங்க ! கவிதை எழுத போறேன். அட !அப்புறம் அடிங்க ! அந்த உரிமை உங்களுக்கு உண்டு . ஆனா படிச்சிட்டு அடிங்க !

  ***********************************************************************
முந்தைய பதிவு கண்டு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் இனிய நன்றிகள் ஆயிரம் .ஆயிரம் ........


அன்புக்குரிய  பன்னிகுட்டி ராமசாமி 
@FOOD NELLAI @
கோகுல்@Rathnavel ,Strajan (ஸ்டார்ஜன்) @ !சிவகுமார் !,@Abdul basith @ப .செல்வகுமார்

விக்கியுலகம் @,வினோத்
@ தங்கம் பழனி @சி,பி செந்தில்குமார் 
@MANO  நாஞ்சில் மனோ .
------------------------------------------------------------------------------------
.ரொம்ப நாளா நான்  படுற கஷ்டம் . திருநெல்வேலி இல்  இருந்து மதுரைக்கு ஒரு மிட் நைட் ட்ரெயின் (கொல்லம்  டு மதுரை )
கொல்லம் பாசஜ-  சரியாய்  12 .45 க்கு திருநெல்வேலியில்  எடுத்து  காலை 6 .30 மணிக்கு மதுரை  அ....டை..யு................ம் . (நம்பலாம் )
அதை ரயில் ஊர்தி என்று  சொல்லலாம் . உங்களுக்கு  எந்த வேலையும் இல்லாமல் ஒய்வு  இருந்தால் ஒரு பயணம்
போய் பாருங்க .இந்தியா எப்படி  கஷ்டமா  வளருதுன்னு  மன்னிக்கவும் உருளுதுன்னு 
அனுபவ   பூர்வமாக தெரியம் .(ஆனாலும்  ஒரு சுகம் உண்டு டிக்கெட் FARE  ஜஸ்ட்  23 /- மட்டும). 
நீங்க சும்மா ட்ரெயின்  பினானாடி வாக்கிங்  போன கூட மதுரை வந்துடும்.
         ++++++++++++++++++++++++++++++++++++
 முதன் முதலாக  "ஊடல்" பற்றி ஒரு அழகான கவிதை (நம்புங்கள் )

 
ஊடல் ...கூடல் ...தேடல்


ஈ..... ர .....ச்  சாரலில் ......
பட... பட..வென..! . 
சட.....சட..வென !
வளைந்து...நெளிந்து  ...
விழுந்து ...எழுந்து .....
திகைத்து! 
திளைத்து ! 
களைத்து ! 
சல சல....வென  ...காற்றில்  ..
அசைந்து..........அசைந்து.....
அசைந்து..........அசைந்து.....
ஆடியது....ஆ..டி..ய..து..!
தீ....குச்சி  காடுகள் .



 ++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு கலக்கல் ஜோக் : 
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,  
கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி 
எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... 
சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...


 ++++++++++++++++++++++++++++++++++++++++



 கமலின் கலக்கல் -கமல் படித்தது பத்தாம் வகுப்பு 
தனது தனி திறமையால்  மொழி பல கற்று  மும்பை IIT மாணவர்களுடன்  உரையாடும்  திறமை . பார்க்கலாம் ரசிக்கலாம் ....
 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நாம் பார்க்கும் எந்த வேலை என்றாலும்  எப்படி அதில்
நம்மை மேம்படுத்துதல்  என்று அறிய வேண்டும் . அவன்தான் புத்திசாலியான  திறமைசாலி இவன் அந்த வகை .
 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மிகவும் பிரியமானவர்களுக்கு, நண்பர்களுக்கு,
தங்களிடம் ஓர் உதவியை நாடுகின்றேன்.
ஒரு கடினமான @ கஷ்மான சுழ்நிலையில் உங்களின் உதவி எனக்கு 
தேவைப்படுன்றது. எனக்கு உதவ கைகொடுக்கும் உள்ளங்கள் என்னை தொடர்பு 
கொள்ளவும் .
நட்புடனும் @அன்புடனும் 
யானைக்குட்டி ஞானேந்திரன்  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
ஜோக் கார்நெற் :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
போட்டோ கார்நெற் 
------------------------------------------------
திருநெல்வேலியில்  எப்போதும்  கூட்டம் கூடும் இடம்.
 ------------------------------------------------------------------------------------------------------
 

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 




 

Post Comment

Sunday, January 22, 2012

ஒரு பதிவரின் மனசு ஒரு பதிவருக்குத்தான் புரியும்.

என் இனிய  நண்பர்களுக்கு ...ஒரு 45 நாள்களுக்கு  பிறகு சந்திக்கிறோம் .
அடிகடி உங்களை சந்திக்க ஆவல் .சில  குடும்ப சூழ்நிலை ..இந்த இடைப்பட்ட 
நாள்களில் நண்பன் ,மௌனகுரு படம் இரண்டும் பார்த்து ...ஓகே...
நன்றாக இருந்தது .
பார்க்க (உண்மையில்) நினைத்தது மேதை படம் .வாய்ப்பு அமையவில்லை.  பிலாசபி பிரபாகர் , மெட்ராஸ் பவன் சிவகுமார் ,
ரத்தினவேல் சார் மற்றும் பழனிவேல் 
ஆகியயோருடன் (செல் )ல்ல
உரையாடல்கள்  இனிமை .
மிஸ் பண்ணியது  ஈரோடு பதிவர் சந்திப்பு மற்றும்  உணவு உலகம் திரு சங்கரலிங்கம்  சார்  அவர்களின் இருநிகழ்ச்சிகள் ...அப்புறம் சாரி கெளசல்ய மாம் .தாங்கள் முன்னின்று
நடத்திய நிகழ்ச்சியில் இந்த எளியவனை அழைத்தும் கலந்து கொள்ள இயலவில்லை மன்னிக்கவும்.
இனி  இரண்டு தகவல்கள் .
விரைவில் :-இந்த யானைக்குட்டி ப்ளாக். மாத  இருபக்க  இதழாக  மலர்கிறது .(திருநெல்வேலி பகுதி மட்டும் .) தங்களின் அன்பையும் ஆதரவையும் 
பணிவன்புடன் கேட்கிறான்  யானைக்குட்டி .

அப்புறம் மேன் மக்கள் மேன்  மக்கள் தான்  Thank  u  ஜாக்கி சேகர் சார் .
அதிங்க பிரசிங்கதனமாக நான் எழுதியதை பொருத்து கொண்டு எம்புட்டு 
அழகாக தாங்கள் எழுதி உள்ளீர்கள் . மிகவும் நன்றி  நன்றி .

Re: [JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)] New comment on வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்.
Inbox
x

jackiesekar dtsphotography@gmail.com
10/22/11

to me
இயல்பாய் இருந்தது உங்க பின்னுட்டடம்..
உங்கள் பின்னுட்டம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாகவே உணர்ந்தேன்.. மிக்க நன்றி...
jackiesekar dtsphotography@gmail.com


2011/10/21 யானைகுட்டி @ ஞானேந்திரன் <yannaikutty@gmail.com>
யானைகுட்டி @ ஞானேந்திரன் has left a new comment on your post "வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்":

யார்ற இந்த ஆளு!!
பார்க்க கிறுக்கு பய மாதிரி இருக்கான்????
ஆன! என்னமோ !விசயம் இருக்கு ...பழகி பார்போம் .
(மன்னிக்கவும் ) படித்து பார்போம் .என்றுதான் உங்கள்
ப்ளாக் வந்தான் இந்த .-யானைக்குட்டி -
டெய்லி எங்கோ !sb .பாலசுப்ரமணியன் பாட்டு...கேட்டு விடுவது போல
உங்கள் ப்ளாக் டெய்லி பார்த்து விடுவன்.
உங்கள் எழுத்தில் 'உயிர் 'உள்ளது .
உங்களின் இடம் *-ப்ளாக் உலகில் ...தனி சிம்மாசனம் உடையது.
வாழ்த்துக்கள் இன்னும் வளர .....

-யானைக்குட்டி -




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு சில  சமயங்களில்

ஒரு பதிவு உருவாகும் கதை....








என்னமோ! மனம் ! மிகவும்
லேசாக லேசாக ...........
உள்ளது .........
கண் முன் உலகம்....
சற்று பிடிக்காமல் ..
என்னை பிடித்துகொண்டு உள்ளது .
விரல்கள் மேலும்  டைப்
செய்ய முடியாமல் ...
இதமாக வலிக்கிறது...
மூளை எதனையும் யோசிக்க
மறுக்கிறது....
எனக்கு  புரிகிறது .....
ஆனாலும் .....
என்னமோ புரிய மறுக்கிறது.
என்ன ஆனாலும் சரி ....

நான் இன்று கண்டிப்பாக ஒரு பதிவு எழுதுவேன்.

யாரும் தப்பிக்க முடியாது .!


(ஒரு பதிவரின் மனசு ஒரு பதிவருக்குத்தான் புரியும்)


*****************************************************************



(வினோ)தம் !


ABCD  சரியாக ...
சொன்ன என் பிள்ளைக்கு ..
அ. ஆ  மட்டும் ..
வரவில்லை .....
பெருமையாய் சொன்னாள்  
மனைவி தமிழரசி ...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அட ஆண்டவா !!!!!!!!!

கோவில் யானை .
ராஜ அலங்காரத்தில
ஒரு ரூபாய்  பிச்சைக்கு
தலை தடவி ....
வாழ்த்தியது .....


+++++++++++++++++++++++++++++++++++++++++





 
இது...என்னால் முடியாது ...
இது   கடினம் இங்குதான்  தோல்வி ஆரம்பம் .

இது கடினம்தான்  ஆனால் என்னால் முடியும் !!!!..
 இங்குதான் வெற்றி ஆரம்பம் ..




+++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொல்ல மறக்காத கதை



என் இறகுகள் வலிக்கின்றன....
மரங்கள் தென்படவில்லை ...
என் இறகுகள் வலிக்கின்றன....
போகும் தூரம் தெரியவில்லை
என் இறகுகள் வலிக்கின்றன....
இதற்கு மேல் எனக்கு சக்தி இல்லை...
ஆனாலும் ....ஆனாலும்
என் உணவை
என் கூட்டில்  யாரும் ....
வைப்பதில்லை!!!!! 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ரசித்த படங்கள் 
இதற்குத்தான் ஆசை பட்டாய பாலகுமார!!!!!!!!!!!!!!!!!!!!!!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை மெரினா  (சென்னை உங்களை வரவேற்கிறது ! புரிகிறதா !)





இயக்கம்@கருத்து @கவிதை : யானைக்குட்டி


தயாரிப்பு@ஒளிபதிவு : கூகுள

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோக் CARNER 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




Post Comment